புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுதுறை ஆண்டு கூட்டம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-22 08:44 GMT

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில்.   வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம்.   நடைபெற்றது கூட்டத்தில் புதுக்கோட்டை தொல்லியல்  ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கலந்து கொண்டு உரையாற்றினார்

  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் முதுகலை வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது .

புதுக்கோட்டை மாவட்டக்கல்வெட்டுகளில் உயிரினங்களின் பல்வகைமை பற்றி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்கள் இடைக்காலத்தைச்சேர்ந்த சுற்றுச்சூழலையும், உள்ளூர் பகுதியில் காணப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றியும் அறிந்துகொள்ள நேரடி ஆதாரமாக இக்கல்வெட்டுகள் விளங்குவதாகவும்,இதன் மூலமாக கடந்த கால இயற்கை சூழலையும் தற்போதைய இயற்கை சூழலையும் ஒப்புநோக்கும் போது பெருவாரியான உயிரின வளங்களை நாம் இழந்திருப்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும், கடந்த காலத்தில் உள்ளூரில் இருந்த மரங்கள் , தாவர வகைகளை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் பழமையான இயற்கை சமநிலையை சீர்படுத்த இயலுமென்றும், நமது சூழலுக்கு சற்றும் ஒவ்வாத யூக்கலிப்ட்டஸ் உள்ளிட்ட மரங்களை நாம் முழுவதுமாக கைவிட்டு நமது பண்டைய இயற்கையான உள்ளூர் சிற்றினங்கள் அடங்கிய வனங்களை உருவாக்குவது காலத்தின் தேவை என்றார்.

நிகழ்வில் முனைவர் சரளா, முனைவர்.மாலதி மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முனைவர் காயத்திரிதேவி வரவேற்புரையாற்றினார். நிறைவில் இறுதியாண்டு மாணவி ஷாலினி நன்றி கூறினார்

Tags:    

Similar News