புதுக்கோட்டையில் ரூ 2000 நிவாரணம், 14 வகையான மளிகைப் பொருட்கள், அமைச்சர்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் ரூ 2000 நிவாரணம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்.

Update: 2021-06-15 09:31 GMT

புதுக்கோட்டையில் இரண்டாயிரம் நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அருகில் எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அடப்பன்வயல் பகுதியில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் பணம் 14 வகையான மளிகைப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை வைத்து பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் இரண்டாவதாக 2000 பணத்தையும் வழங்கினர்

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, வருவாய் அலுவலர் சரவணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் ,நகர கழக செயலாளர் நைனா முகமது, மற்றும் அரசுதுறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News