காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் தண்ணீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-11-27 07:15 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மருங்கூரனி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் சாலையில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியிலிருந்து கரம்பக்குடி புதுக்கோட்டை கல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளில் செல்ல முடியாமல் தவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News