பிரதமர் மோடி பிறந்த நாள் : பிரியாணி வழங்கி கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்

Update: 2021-09-17 09:07 GMT

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணியில் வழங்கிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை  பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் 71 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை தொழில் பிரிவு அணி மாவட்டத் தலைவர் சீனிவாசன்  தலைமையில், இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும்  பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்,  பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராம.சேதுபதி, மாவட்ட துணைத் தலைவர் சாந்திமுத்து, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சுப்பையா, விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்துரு, மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags:    

Similar News