புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் (ஜூலை 5) மின் தடை

Power outage in Pudukottai Chipkot substation areas

Update: 2022-07-03 12:30 GMT

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின் வரும் பகுதிகளில் (05.07.2022)  செவ்வாய்கிழமை காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  மின்வாரிய உதவி செயற்பொறியாளர்  (இயக்குதலும்- காத்தலும் / கிராமியம்) எஸ். கண்ணன் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி.

கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி வாகவாசல், முள்ளூர், இச்சடி. வடவாளம். புத்தாம்பூர். செம்பாட்டூர். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும்  சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களில்  05.07.2022 (செவ்வாய்கிழமை)  காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்வினியோகம் இருக்காது  என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News