பொன்னமராவதி அழகியநாச்சிஅம்மன் திருக்கோவிலில் தேரோட்டம்
பொன்னமராவதியிலுள்ள அழகியநாச்சிஅம்மன் திருக்கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அழகியநாச்சிஅம்மன் திருக்கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. கோவிலின் சிறப்புகள் முதலில் தேர் பவனியைக் காண காலைப்பொழுது முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு வர தொடங்கியது. இதனை அடுத்து புதுப்பொலிவுடன் மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் திருத்தேரில் அழகிய நாச்சியம்மன் அமர்ந்து மக்கள் அனைவருக்கும் அருள் பாலித்த வண்ணம் ஆடி அசைந்து நான்கு பிரகார வீதிகளிலும் வலம் வந்து கோவிலின் முன்பு வந்து நிலைபெற்றது. இதில் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து நான்கு பிரகார வீதிகளிலும் தேர் வடத்தை இழுத்துச் சென்று அழகியநாச்சி அம்மனின் அருளை பெற்றனர்.