திருச்சி மத்திய மண்டலத்தில் குட்கா புகையிலை விற்பனை தொடர்பாக125 வழக்குகள் பதிவு

Police registered 125 cases for sale of Gutka tobacco in Trichy Central Zone

Update: 2022-06-19 02:00 GMT

திருச்சி மத்திய மண்டலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை தொடர்பாக125 வழக்குகள் பதிவு செய்து149 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சிமத்தியமண்டலகாவல்துறைதலைவர் திரு.சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், திருச்சிராப்பள்ளிசரக காவல்துறைதுணைத் தலைவர் சரவணசுந்தர் மேற்பார்வையில்,திருச்சிராப்பள்ளிகாவல் சரககண்காணிப்பாளர்கள், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர்  தலைமையில் ,குட்கா மற்றும் புகையிலை சிறப்புஅதிரடி வேட்டை 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய இரண்டு நாள்கள்  நடத்தப்பட்டன.

அதில் சட்ட விரோதமாக குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவுசெய்து 0.645 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவு செய்து 11.140 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும்,  கரூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து 82.078 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும்,பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவுசெய்து 9.919கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவுசெய்து 45.754 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலைபறிமுதல் செய்யப்பட்டது .(மொத்தமாகபறிமுதல் செய்யப்பட்டகுட்காஅளவு 149.536 கிலோ கிராம் மற்றும் அதன் மதிப்புரூபாய் 1,05,429.  ஆகும். 

 மேலும் இவ்வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டு குட்கா மற்றும் புகையிலை குற்றவாளிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக  திருச்சி சரககாவல் துணைத்தலைவர் .சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News