ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது

வேலை வாங்கித் தருவதாக ரூ. 35 லட்சம் மோசடி செய்த வழக்கில், புதுக்கோட்டை ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-01-20 03:45 GMT

ராஜமாணிக்கம் 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம் இவர் மீது ஏற்கனவே 4 மோசடி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில்,  ராஜமாணிக்கம்,  10 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி,  ரூ 35 லட்சத்திற்கு மேல் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை,  வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நகர காவல்நிலைய போலீசார், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் மீது, மோசடி வழக்குpபதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News