புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் நரசிம்மர் ஜயந்தி விழா

ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-05-15 12:30 GMT

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற நரசிம்மர் ஜயந்தி விழா

புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி வைபவ பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ நரசிம்மர், லெட்சுமிநரசிம்மர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் கே.மணிகுருக்கள் தலைமையில் மகா தீபாராதனை நடைபெற்றது.மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4 -ஆவது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். ஸ்ரீனிவாச சுந்தர்ராஜ் பாகவதர் பக்தி சொற்பழிவு தயாளன் தாமோதரன் நிலவை பழனியப்பன் ஹரிணி சிறுவர் சிறுமியர்களின்ஆகியோரின் இசை கச்சேரியும் நடந்தன.

நிகழ்ச்சியில் மருத்துவர் ராம்தாஸ் உள்ளிட்டபக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அனுமன் திருச்சபை யினர் ஆன்மிக நெறியாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.இதில், ஆன்மீக அன்பர் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது .


Tags:    

Similar News