புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பூ கொடுத்து அமைச்சர் வரவேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தமிழகத்தில் 600 நாட்களுக்கு பிறகு இன்று ஒண்ணாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் 600 நாட்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பூக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.