புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகம் முன்பு தொழிற்சங்க கொடிஏற்றி வைத்து கொண்டாடினர்

Update: 2022-05-01 12:36 GMT

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது

 புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் பேரணி கட்சி கொடி ஏற்றுதல் என தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வடக்கு ராஜவீதி மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகம் முன்பு தொழிற்சங்க கொடிகளை ஏற்றி வைத்து கோஷங்கள் எழுப்பி மே தினத்தை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் தொமுச மாவட்டத் தலைவர் ரத்தினம் தலைமை வைத்தார். பேரவையின் செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.இந்த பேரணியில் சண்முகம் ,நாகராஜன், அருள் ஞானசேகரன், மணிமொழியன், மூர்த்தி, பழனிவேலு, ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News