மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அண்ணா சிலை அருகே மத்திய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-19 13:10 GMT

அண்ணா சிலை அருகே மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகக்கூறி, திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இன்று புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்ட குழு சார்பில்,  இந்தியை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News