முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் திருமண விழாவை முன்னிட்டு இன்று கட்சி நிர்வாகிகள் மற்றும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுடன் கேக் வெட்டி திருமணநாளை கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு ,மாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக், நகரத் துணைச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மாவட்ட பொருளாளர் செந்திலுக்கு திருமண வாழ்த்துக்கள் கூறினர்.