புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுபதி தமிழக சட்டத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். அதன் பின்னர் இன்று முதன் முதலாக இன்று சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் புதுக்கோட்டைக்கு வந்தார். மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் ரோஜா இல்லத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.