ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினம்: ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Update: 2021-12-05 04:44 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் இன்று கட்சி நிர்வாகிகள் அவருடைய புகைப்படத்திற்கு மலர்தூவி பொது மக்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜசேகரன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

மற்றும் அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக காலை உணவை வழங்கி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் அதிமுக நகர கழக செயலாளர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சேட் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News