புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 4 மணி நேரமாக பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது

Update: 2021-09-01 15:08 GMT

புதுக்கோட்டையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து வரும் வாகனம்

தமிழகத்தில் சென்னை,  திருவள்ளூர், மதுரை, வேலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் , சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலை 4 மணி முதல் தொடர்ந்து தற்போது வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது . குறிப்பாக, புதுக்கோட்டை நகர பகுதிகளில் நீதிமன்ற வளாகம், மின்வாரிய அலுவலகம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து   4  மணி நேரமாக     பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News