பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்

ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது மாணவ மாணவிகள் இடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2021-09-01 06:04 GMT

புதுக்கோட்டை, காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ,மாணவ, மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றனர்.  ஐந்து மாதங்களுக்குப் பிறகு பள்ளியில் இன்று  வருகை தந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜு மற்றும் ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவ, மாணவிகளை மலர் தூவி வரவேற்பளித்து  மகிழ்ச்சி அடையச் செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்ததால், மாணவர்கள் மிகுந்த சோர்வடைந்து வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்தனர். இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன்  பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.  5 மாதங்களுக்குப் பிறகு வருகை தந்த மாணவ மாணவிகளை, ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிதைப்பித்தன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராசு, சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News