புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கொலை செய்த இருவர் கைது

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-01-24 03:35 GMT

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் உதவியாளராக பணியாற்றி வந்தவர் நாகரத்தினம் (வயது 65).இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது ஓய்வு அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை நகர காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

சி.சி.டி.வி. கேமரா பதிவில் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் நடந்து சென்றது தெரியவந்தது

இதனை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இருவரும் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சிவா என்ற ஜீவானந்தம் மற்றொருவர் வீர ராசு என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து குற்றவாளி சிவாவை புதுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர். வீரராசுவை ஒரத்தநாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்

போலீசார் செய்த விசாரணையில் சம்பவம் நடந்த தினத்தன்று இருவரும் மருத்துவமனை வளாகத்திற்குள் மது அருந்தி கொண்டு இருந்ததாகவும் அதனை நாகரத்தினம் பார்த்து அவர்களை திட்டியதோடு விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நாகரத்தினத்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரையும் நகர காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

வீரராசு  கடந்த வருடம் கோட்டை பட்டினத்தில் இதே போன்று ஒரு மூதாட்டியை நகைக்காக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News