புதுக்கோட்டை எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

காவிரி குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் நடைபெறுவதால் விவசாயிகளின் நிலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்

Update: 2021-10-26 10:00 GMT

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ முத்துராஜாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய விவசாயிகள்

காவிரி குண்டாறு இணைப்புத்திட்டம் தொடர்பாக புதுக்கோட்டை எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை  விவசாயிகள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா அலுவலகத்தில் தினந்தோறும் காலை 10 மணியளவில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்  என பலரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.அதேபோல் இன்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜாவிடம்,  ராஜகுளத்தூர் பகுதி விவசாயிகள் அளித்த மனுவில்,  காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் நிலம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுக்கிறேன் விவசாயிகளிடம் உறுதியளித்தார்.


Tags:    

Similar News