பிரதமர் மோடி புகைப்படத்தை எரித்து விவசாயிகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் புகைப்படங்களை எரித்தனர்

Update: 2021-10-15 07:00 GMT

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரின்        புகைப்படங்களை எரித்து                       ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர் 

புதுக்கோட்டையில்  விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடி புகைப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் வாகனம் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத், ஆகியோரின் புகைப்படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் புகைப்படங்களை எரிக்க முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


Tags:    

Similar News