புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-16 06:30 GMT

புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே செயல்படும் உழவர் சந்தையின் உள்ளே இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு உள்ளே வராமல் வெளியில் செயல்படும் கடைகளில் வாங்கிச் செல்வதால் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு போதிய அளவில் வியாபாரம் நடைபெறுவது இல்லை என இன்று காலை உழவர் சந்தை முன்பு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

Similar News