புதுக்கோட்டை: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, புதுக்கோட்டையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-17 06:45 GMT

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே, மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை திட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தேசிய ஊரக வேலை உறுதித் சட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இதில் பணியாற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை ஜாதி வாரியாக பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி செய்வதாக, விவசாயத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்து, இம்முயற்சியை அரசு கைவிடக்கோரி, புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News