புதுக்கோட்டை நகராட்சி பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் உபகரணங்கள்
புதுக்கோட்டை நகராட்சி பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய ரோட்டரி சங்க நிர்வாகிகள்
புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கொரானோ நிவாரண பணிகளில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 9மண்டலங்களுக்கு தேவையான 45 செட் அடங்கிய மண்வெட்டி, அரிவாள் மற்றும் மண் சட்டிகள் நகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் நகராட்சி ஆணையர் (பொ)கிருஷ்ணவேணி, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் உபகரணங்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா முன்னிலையில் கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கைலாசம் நகராட்சி பணியாளர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் கான், கிங்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சவரிமுத்து, அசோகன், நகர கழக செயலாளர் நைனாமுகம்மது, ரோட்டரி சங்க நிர்வாகி மோகன்ராஜ்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.