திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு : மாணவ மாணவிகள் உறுதி ஏற்பு

கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை கட்டாயம் இடத்துச் செல்வதென மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்

Update: 2021-12-24 06:45 GMT

திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு குறித்த.                உறுதிமொழி எடுத்து கொண்ட.         மாணவ மாணவிகளுக்கு மாவட்ட.   சுற்றுச்சூழல் பொறியாளர்    குணசேகரன் உதவி பொறியாளர்   ராஜ ராஜேஸ்வரி ஆகியோர்    துணிப்பை வழங்கி   விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு குறித்து மாணவ மாணவிகள் உறுதி எடுத்து கொண்டனர்.

தமிழகத்தில் நெகிழிப் பைகளை ஒழிப்பது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை தமிழகஅரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகத்தில் இனிமேல் நெகிழிப் பைகளை பயன்படுத்தாமல் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் நெகிழிப்பை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் மஞ்சப்பை அனைவரும் பயன் படுத்துவோம் என தமிழக முதலமைச்சர் விழிப்புணர்வை ஏற்படுத்தி திட்டத்தை தொடக்கி வைத்தார்.

அதனை செயல்படுத்தும் விதத்தில், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் மற்றும் உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோரின் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நெகிழிப் பைகளை பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் விளைவிக்கும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும். தமிழக அரசு அறிவித்தது போல் அனைவரும் மஞ்சப்பை மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள மஞ்சப்பை மற்றும் துணி பைகளை வழங்கி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்த மாட்டோம். வீடுகளில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை கட்டாயம் இடத்துச் செல்வம் போன்ற விழிப்புணர்வு உறுதி மொழிகளை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உதவித் தலைமையாசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் சரஸ்வதி ஆறுமுகம், தங்கராஜ், காசிநாதன், சமூக ஆர்வலர் முரளிதரன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News