குருத்தோலை நிகழ்ச்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

புதுக்கோட்டை திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் குருத்தோலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்களிடம் வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் முத்துராஜா.

Update: 2021-03-28 11:32 GMT

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு குருத்தோலை பவனி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து குருத்தோலையை கையிலேந்தி ஊர்வலமாக வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்க வந்த திமுக வேட்பாளர் முத்துராஜா திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலி முடிந்த பின் வெளியே வந்த கிறிஸ்தவர்களிடம் திமுக வேட்பாளர் முத்துராஜா மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.

Tags:    

Similar News