மாயனூர் கல்லணை கால்வாய் பகுதியை பார்வையிட்ட மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர்

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது

Update: 2022-03-16 08:43 GMT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் மாயனூர் கல்லணை கால்வாய் பகுதிகளை பார்வையிட்டனர்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் தலைவர் துரைராஜ் தலைமையில் சுமார் இருபது பேர் கரூர் மாவட்டம், மாயனூர் அணைக்கட்டு பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் துரைராஜ் கூறும்போது, கடந்த காலத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட கால்வாய் முழுமை பெறாமல் இருந்தது. பின்னர் வந்த அதிமுக அரசு கட்டளை கால்வாய் நிறுவ நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில் இன்று நேரில் வந்து பார்வையிட்டதாக தெரிவித்தார்.இந்த கால்வாய் பணியை  விரைந்து முடிக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News