கொரோனா பரவலுக்கு நாமே வழிவகுக்கலாமா? கோவிலில் சமூக இடைவெளி 'மிஸ்ஸிங்'

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூட்டம் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற கவலை எழுந்துள்ளது.

Update: 2021-09-08 11:56 GMT

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு கூட்டம் கூட்டமாக கூடிய பொதுமக்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக திருமண மண்டபங்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சுப முகூர்த்த நாளான இன்று, புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 

ஆனால், திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசங்கள் அணியாமல் இருந்தனர். அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி, இதுபோல் திருமண நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் , மீண்டும் பெருந்தொறு பரவும் சூழல் ஏற்படுமோ என்று, சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுபற்றி கோயில் நிர்வாகம் தரப்பிலும் எந்த ஒரு அறிவிப்போ, கண்காணிப்போ இல்லாதது, பலரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே வருங்காலங்களில் அல்லது சுபமுகூர்த்த நாட்களில், கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்வுகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News