ஊரடங்கை மீறி திறந்த கடைகள், மூடி சீல் வைத்து அபராதம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி திறந்த கடைகளை மூடி சீல் வைத்து கோட்டாட்சியர் அபராதம் விதித்தார்.
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் உள்ள இரும்பு மெட்டீரியல் கடை மற்றும் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள (ஸ்வீட் கடைஆகிய இரண்டு கடைகளும் கொரோன ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.
இதனை கண்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கடையை இழுத்து மூடி இரண்டு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்து மேலும் இரண்டு கடை களுக்கும் 5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த ஆய்வில் கோட்டாட்சியர் டெய்சி குமார் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்