புதுக்கோட்டையில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

சமத்துவம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-05-21 08:34 GMT

நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளும் மாற்றுத்திறனாளி பெண்.

கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு சமத்துவம் அறக்கட்டளை சார்பில்  திமுக நகர கழக செயலாளரும் சமத்துவம் அறக்கட்டளை தலைவருமான  நைனா முகமது  அவரது குடும்பத்தினர் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் 100 பேர் இதில் பயன் அடைந்தனர்.  இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் சமத்துவம் அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News