புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,170 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை நகராட்சி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை ஆட்சியர் கவிதாராமு பார்வையிட்டார்

Update: 2022-05-08 12:30 GMT

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 29-  ஆவது மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் 3,170 இடங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை அருகில் நடைபெற்று வரும் 29வது மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு  (08.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 1,637 இடங்களிலும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 1,533 இடங்களிலும் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தல் 3,170 இடங்களில் இன்று மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் 15,850 பணியளார்கள் பணி மேற்கொண்டார்கள். ஏராளமான பொதுமக்கள் இம்முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்.புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கோவிட் -19 தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News