பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2021-07-13 05:15 GMT

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், கேஸ், விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காந்தி சிலை முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த சைக்கிள் பேரணியானது காந்தி சிலையில் இருந்து துவங்கி கீழ ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு பேரணி வந்தடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News