“நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” திட்டத்திற்காக சமூக பங்களிப்பு நிதி

நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளிதிட்டத்திற்காக சமூக பங்களிப்பு நிதியை தாராளமாக வழங்க முன்வரவேண்டுமென ஆட்சியர் அறிக்கை

Update: 2023-03-17 11:15 GMT

நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” திட்டத்திற்காக சமூக பங்களிப்பு நிதிவழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்

தமிழ்நாடு அரசால் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற “நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டப்பணிகளுக்கு நிதி அளிப்பது, பொருள்களாக வழங்குவது, தன்னார்வ சேவைபுரிவது வாயிலாக அரசுபள்ளிகளின் அடிப்படை தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றிட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சமூகபங்களிப்பு நிதியினை பெற  தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த டிசம்பர் - 19, 2022 அன்று “நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” என்ற (https://nammaschool.tnschools.2ov.in) தனி இணையதளம் மற்றும் தனிவங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பெரு, சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்பு அளித்திட உறு துணையாக உள்ளது.

இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்பட்டு நன்கொடையாளருக்கு பயனீட்டுச் சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கென தனி நபர்கள், முன்னாள் மாணவர்கள் குறு மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி போன்றவை “நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP)" இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” என்ற பெயரில் வங்கி கணக்கு துவங்கவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து உட் கட்டமைப்பு வசதிக்கான பொருட் செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்தார்.

Tags:    

Similar News