மத்திய பாதுகாப்பு படையினருடன் ஹோலி கொண்டாடிய கலெக்டர், எஸ்பி

மத்திய பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி காவல் கண்காணிப்பு அலுவலர் பாலாஜி சரவணன் ஹோலி கொண்டாட்டம்

Update: 2021-03-30 03:45 GMT

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வந்துள்ளனர். 

தற்போது தேர்தல் பணிக்காக தமிழகம் வந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினருடன், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஹோலி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். முகக்கவசம் அணிந்தும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் புதுக்கோட்டை காவலர் பயிற்சி பள்ளி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட விழாவில் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் வண்ண கலர் பொடிகளை பூசி கொண்டும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

Tags:    

Similar News