வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த தாசில்தார் திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த வட்டாட்சியர் சுரேஷ் கண்ணன் மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் உயிரிழந்த வட்டாட்சியர் சுரேஷ் கண்ணன் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் அதேபோல் அரசு அலுவலர்கள் அனைவரும் அவருடைய புகைப்படத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.