புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு

நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள குறைகளை ஆட்சியர் கவிதாராமுவிடம் கூறினர்

Update: 2021-08-24 14:46 GMT

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

திடீரென இரவில் அரசு மதுபான கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு சீல் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதேபோல் மாவட்ட ஆட்சியர் பணிக்காக ஆட்சியர் அலுவலகம் செல்லும் பொழுது, பல்வேறு இடங்களில் திடீரென வாகனத்தை நிறுத்தி திடீர் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு குறைகளை ஆட்சியர் கவிதா ராமுவிடம் எடுத்துக் கூறினர்.மாவட்ட ஆட்சியர் நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வு விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News