மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

புதுக்கோட்டை போஸ் நகர் பொதுமக்கள் சார்பில் மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-10 05:00 GMT

புதுக்கோட்டை போஸ் நகர் பொதுமக்கள் சார்பில் மறைந்த ராணுவ தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 இராணுவ வீரர்கள் கடந்த எட்டாம் தேதி குன்னூர் அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியதில் இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் உடல் கருகி இறந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில் போஸ் நகர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அலங்கரிக்கப்பட்ட இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் புகைப்படத்திற்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் போஸ் நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News