புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மறியல் போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மறியல் போராட்டம்.

Update: 2021-12-10 14:14 GMT

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் 10 நிமிட வாகனங்கள் நிறுத்த போராட்டத்தை சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் சிஐடியு சார்பில் பத்து நிமிட மறியல் போராட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News