மதுபோதையில் சாக்கடைக்குள் விழுந்த குடிமகன்

புதுக்கோட்டையில் மது போதையில் சாக்கடையில் விழுந்த குடிமகனால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-05 17:00 GMT

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது அப்பகுதியில் மது குடிப்பவர்கள் அருகிலுள்ள கடைகள் சாலையோரங்களில் என நின்றுகொண்டு மத குடிப்பது வழக்கம். 

சாலைகளில் படுத்துக்கொள்வது கடை ஓரங்களில் படுத்துக்கொள்வது என போக்குவரத்துக்கு இடையூறாக மது குடிப்பவர்களால் சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு மது குடித்த ஒருவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாக்கடை கால்வாய்கள் மதுபோதையில் நிலைதடுமாறி உள்ளே விழுந்து விட்டார்

அருகில் இருந்தவர்கள் அவர் விழுந்ததை பார்த்து கூச்சலிட்டது உடன் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் சென்றவர் கூட்டம்கூட்டமாக சாக்கடைக் குழிக்குள் மதுபோதையில் தடுமாறி உள்ளே விழுந்து புரண்டு கொண்டிருந்தார். அங்கு கூடிய பொதுமக்கள் அவரை சாக்கடையில் இருந்து தூக்கி , வெளியே போட்டு, தண்ணீர் ஊற்றி குளிக்கவைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News