சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை

புதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-09-07 18:01 GMT

பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகுமார்.

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே உள்ள அரிசி காடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் வயது 39. இவர் வீட்டுக்கு அருகிலுள்ள நாகம்மாள் என்பவரது மகள் 15 வயது சிறுமியை கடந்த 31.1 2020 அன்று அவரது வீட்டிற்குள் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை சிறுமியின் தாயார் நாகம்மாள் தடுத்துள்ளார். அவரையும் தாக்கிவிட்டு சசிகுமார் ஓடிவிட்டார்.

இது குறித்து நாகம்மாள் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பிரிவின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும் சிறுமியின் தாயாரை தாக்கியதாக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 65 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News