புதுக்கோட்டையில் தனியார்- அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம்

அரசு பேருந்து மண்டல பொது மேலாளர் இளங்கோவனை தனியார் பேருந்து ஓட்டுனர் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது

Update: 2022-03-07 15:07 GMT

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

 புதுக்கோட்டையில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு  இடையே நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது..

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே திருச்சி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி பேருந்துகள் நிற்பதற்கு புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது  அதேபோல் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டும் பேருந்துக்கு உரிய நேரத்தினை கடைபிடிக்காமல் பேருந்து இயக்கினாராம்.  இதனைத்தட்டிக் கேட்ட, அரசு பேருந்து மண்டல பொது மேலாளர் இளங்கோவனை தனியார் பேருந்து ஓட்டுனர் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என கூறியதை அடுத்து தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர்.பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News