புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கத்தை நீதிபதி அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-07 06:46 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கத்தை நீதிபதி அப்துல் காதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று முதல் தொடங்கி வரும் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பதற்கு கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பிரச்சார இயக்கத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.சார்பு நீதிபதி ராஜா சிறப்புரையாற்றினார்

பிரசார இயக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் கொத்தடிமைகளாக யாரும் பணியாற்றக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News