புதுக்கோட்டையில் நடிகர் விவேக் மறைவையொட்டி அஞ்சலி கூட்டம்

புதுக்கோட்டையில் நடிகர் விவேக் மறைவையொட்டி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-04-18 08:30 GMT

புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் இன்று காலை மரம் நண்பர்கள், பாண்டியன் சிலம்ப பாசறை, மரபுகலை பாதுகாப்புச் சங்கம், சார்பாக மறைந்த இயற்கை போராளி பத்மஸ்ரீ விவேக் அவர்களின் நினைவாக அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது

அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டில் மறைந்த இயற்கை போராளி பத்மஸ்ரீ விவேக் அவர்களின் நினைவை ஏற்படுத்தும் விதமாக வீடுகளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் எனவும், இயற்கையை காப்போம் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்போம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் எட்வின். பேராசிரியர் விஸ்வ நாதன் .கார்த்திக் மெஸ் மூர்த்தி. பாரத விலாஸ் கிருஷ்ணமூர்த்தி. பழனியப்பா கண்ணன். மொபைல் ராஜு. பொறியாளர் ரியாஸ்கான். பொறியாளர் இறையன்பு ..பிரகாஷ். விக்னேஸ்வரன். பயிற்சியாளர்கள் பாண்டியன். இளஞ் சூர்யா .கார்த்திக். சோபிகா. சபரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News