பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 22.03.2021 அன்று வழக்கு பதியப்பட்டு குழந்தையின் தந்தை மாரிமுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

Update: 2021-12-14 10:45 GMT

 மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல்  விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம்,  மண்டையூர் அருகே உள்ள வாத்திராமேடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தன்னுடைய 6 வயது பெண் குழந்தைக்கு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கும் பொழுது பாலியல் துன்புறுத்தல் செய்தாராம்.

இது தொடர்பாக  7 வயது குழந்தையின் தாய் நாகலட்சுமி, கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த 22.03.2021 அன்று வழக்கு பதியப்பட்டு குழந்தையின் தந்தை மாரிமுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

 புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் சத்தியா, பெற்ற மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சிறுமியின் தந்தை மாரிமுத்துக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News