புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

Update: 2021-04-28 17:30 GMT

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல் படியான கோவிட் 19 வைரஸைக் கண்டறியும் ஆர்டிபிசிஆர் ஆய்வகம். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஓராண்டு காலத்தில் 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், ஆய்வக நிபுணர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கணினி செயல்பட்டார்கள் ஆகிய அனைவரும் சுழற்சி முறையில் ஒரு குழுவாக இரவும் பகலும் அயராது பாடுபட்டு 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளைளும் தடையின்றி கிடைக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளதையடுத்து அதனைப் பாராட்டும் வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News