புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு 25 வது வார்டு உறுப்பினர் திலகவதி செந்தில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது

Update: 2022-03-03 09:29 GMT

புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு 25வது வார்டு நகர்மன்ற திமுக உறுப்பினர் திலகவதி செந்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு

 புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு 25வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திலகவதி செந்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு.

நடந்து முடிந்த நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவி உள்ளிட்டவைகளுக்கு பதவியேற்கும் நிகழ்வு வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

அதற்காக திமுக சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகளுக்கும் நகர் மன்ற தலைவர்கள் யார் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக திமுக தலைமை கழகம் அறிவித்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்றத்தலைவர் பதவிக்கு திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் மனைவி திலகவதி புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.அதேபோல் அறந்தாங்கி நகராட்சியில் போட்டியிடுவதற்காக அறந்தாங்கி நகரக் கழகச் செயலாளர் ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் .இதையடுத்து இரண்டு பேருக்கும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News