ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகைக்கு அனுமதி இல்லாததால் பள்ளிவாசல்கள் வெறிச்சோடியது

புதுக்கோட்டை மாவட்டத்தில்.

Update: 2021-05-14 03:52 GMT

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

தற்போது கொரோன வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதிக அளவில் கூட்டங்கள் கூட கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்படாததால் வெறிச்சோடி பள்ளிவாசல்கள் காணப்படுகிறது.


இஸ்லாமியர்கள் அவர்கள் வீடுகளில் ரமலான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வெறிச்சோடி காணப்படுகிறது அதேபோல் பள்ளிவாசல்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




 




Tags:    

Similar News