புதுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா

Update: 2021-01-15 06:40 GMT

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா, பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் நெல்லுமண்டி தெருவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருநங்கைகள் பாரம்பரிய முறைப்படி கும்மி பாட்டு பாடி பொங்கல் வைத்து உலக நன்மைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர், மேலும் இதில் ஜல்லிக்கட்டு காளையை வழிபட்டனர், பின்னர் சிறுவர்களின் சிலம்பாட்டம், திருநங்கைகளுக்கு உறியடி போட்டிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டு பொங்கலை கோலாகலமாக கொண்டாடினர்.

Tags:    

Similar News