தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

Update: 2021-10-27 06:15 GMT

பைல் படம்.

திருச்செங்கோடு அருகே ஆத்தூராம்பாளையம், அவரைக்காட்டைச் சேர்ந்தவர் சுதா (24), தனியார் பள்ளி ஆசிரியை. திருச்செங்கோடு சன்னியாசிபட்டி கிராமத்தைச் சேர்ந்த, அவரது உறவினரான விவசாயி சீனிவாசன் (29) என்பவர் தன்னை திருமணம் செய்யக்கோரி சுதாவை வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், கடந்த 2009ம்ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி சுதாவை, சீனிவாசன் காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியை சுதாவை கடத்திய சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஆசிரியை சுதாவை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கடத்திய சீனிவாசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

Tags:    

Similar News