அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-27 12:45 GMT

மாதிரி படம்

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு மாற்றுபுகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள்,  இலவசமாக இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News