காஷ்மீர் தாக்குதல்: நாமக்கல்லில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தீவிரவாதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-11 02:30 GMT

தீவிரவாதிகளைக் கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதை கண்டித்து, நாமக்கல் - மோகனூர் ரோட்டில் உள்ள, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு,   விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்,  தீவிரவாதிகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் ரகுபதி, மாவட்டச் செயலாளர் மகாதேவன், பொருளாளர் ஹரீஷ், நகர செயலாளர் அருள், கல்வியாளர் பிரணவ்குமார், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சுப்பிரமணி, சண்முகம் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News